புத்தகம் எழுத்து மற்றும் எழுத்தாளர்கள் பற்றி ஏபிசிடி வரிசையில் 26 கேள்விகளுக்கு எனது பதில்கள். எனது அலுவலக வலையில் சுற்றிக் கொண்டிருக்கும் விளையாட்டு இது!
1. Author you’ve read the most books from:
ஜெயமோகன்
2. Best Sequel Ever:
படிச்சது ஒன்னே ஒன்னுதான். வெண்முரசு – முதற்கனல்/மழைப்பாடல். அடுத்து எனக்கு தெரிஞ்ச சீக்வல் கோபல்ல கிராமம் – கோபல்லபுரத்து மக்கள். இதுல முதல் நாவல் மட்டுமே படித்திருக்கிறேன்.
3. Currently Reading:
ஜே. ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
4. Drink of Choice While Reading:
டீ. ஆனா வாசிக்கறப்ப, சென்னை ரூம்ல டீயே போடத்தெரியாம டீன்னு சொல்லி ஒன்னு போட்டுக்குடுப்பானுங்க பாருங்க.
5. E-reader or Physical Book?
ஈ ரீடர் வெறும் வார்த்தை – புத்தகம் ஒரு எமோசன் (இதத்தான் 55 Question Book MeMe-லயே இங்கிலிஷ்ல சொல்லிட்டியேன்னு கேக்காதீங்க)
6. Fictional Character You Probably Would Have Actually Dated In High School: .
சுசி – அனல்காற்று – ஜெயமோகன் மற்றும் நீலி – காடு– ஜெயமோகன்
(பின்குறிப்பு: கதாநாயகிகளின் வர்ணனை குறித்து ஜெமோ எழுதுவது இருக்கிறதே – அது ராஜபோதை)
7. Glad You Gave This Book A Chance:
மதில்கள் – பஷீர்
8. Hidden Gem Book:
ஸீரோ டிகிரி – சாரு
9. Important Moment in your Reading Life:
ஒரு சம்பவத்துல ரொம்ப அடி வாங்கி நொந்து போயிருந்தப்ப, கன்னி மறுவாசிப்பு ஆரம்பிச்சேன். கன்னி முடிக்கும்போது முழுசா கன்னி போதை தான் இருந்துச்சு. அது மெதுவா கரையும்போது எல்லாத்துலயும் இருந்து விடுதலை கிடைச்சமாதிரி ஒரு உணர்வு வந்துச்சு பாருங்க
10. Just Finished:
கன்னி
11. Kinds of Books You Won’t Read:
மொன்னைத்தனமான த்ரில்லர்கள்
12. Longest Book You’ve Read:
தனிமையின் நூறு ஆண்டுகள்
13. Major book hangover because of:
காடு – ஜெயமோகன்
உணர்வுகளின் கொப்பளிப்பு. இந்த நாவல் அளவுக்கு வேறு எதுவுமே என்னைத் தொந்தரவு செய்யவில்லை. இந்நாவலின் முக்கிய சாராம்சம் அதன் அமைப்பு. கிரி யார் அவனுக்கு என்ன ஆனது என்பது முதலிலேயே தெரிந்து அதன் பின் விரியும் கதைக்களம் அல்ட்டிமேட். இரண்டாவதாக வர்ணனை, மிதமிஞ்சிய விவரிப்பு என்றல்லாமல் நம்மை அப்படியே உள்ளே இழுத்துச்சென்று நம்மையும் அதில் ஒரு அம்சமாக்கிக் காட்டிவிடும் பரவசம் இதற்கு உண்டு. மூன்றாவது பாத்திரப்படைப்பு ரெசாலத்தின் வேதாளச் சிறுத்தைச் சண்டை, குட்டப்பனின் அறிவு, நீலியின் காதல், அந்த ஆப்பீசர், கீரக்காதன் இன்னபிற. ஒருவர் தம் வாழ்வில் நிச்சயம் படித்திருக்கவேண்டிய நாவல் இது
14. Number of Bookcases You Own:
இரண்டு. கோபியில் வீட்டிற்கு ஒன்று கோவையில் ரூமில் ஒன்று
15. One Book You Have Read Multiple Times:
ஜே.ஜே சில குறிப்புகள் / ஸீரோ டிகிரி (இரண்டுமே ஐந்து முறை)
16. Preferred Place To Read:
வீட்டு சோஃபா
17. Quote that inspires you/gives you all the feels from a book you’ve read:
நீங்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள் – ஆத்மாநாம்
18. Reading Regret:
உம்மத் – ஸர்மிளா செய்யத்
19. Series You Started And Need To Finish (all books are out in series):
சீரியஸாவே நான் ஒரே ஒரு சீரியஸ் தானுங்க படிச்சிருக்கேன். அதையும் முடிச்சே ஆகனும். (வெண்முரசு)
20. Three of your All-Time Favorite Books:
காடு – கன்னி – ஜே.ஜே / ஜெமோ – ஃப்ரான்ஸிஸ் கிருபா – சுரா
21. Unapologetic Fanboy For (author):
முன்ன சாரு நிவேதிதா இப்ப ஆசான் ஜெயமோகன்
22. Very Excited For This Release More Than All The Others:
வெண்முரசுல குருஷேத்ரப் போர் நடக்கற பகுதி. அத ஆசான் எழுத்துல படிக்கனும்.
23. Worst Bookish Habit:
படிக்க படிக்க தூக்கம் வந்தா அப்படியே தூக்கிப்போட்டுட்டு தூங்கிருவேன். காலையில பாத்தா அதுமேல உருண்டு அங்கங்க கசங்கிப்போய் கெடக்கும் L
24. X Marks The Spot: Start at the top left of your shelf and pick the 27th book:
ஆ! சல்மாவின் “சாபம்” சிறுகதைத் தொகுப்பு (அது ஏங்க 26ன்னு சொல்லியிருந்தா நக்கீரனின் என் பெயர் ஜிப்ஸி வந்திருக்கும், 28ன்னு சொல்லியிருந்தா – பாத்துமாவின் ஆடு – பஷீர் வந்திருக்கும்)
25. Your latest book purchase:
கோணங்கியின் மதினிமார்கள் கதை
26. ZZZ-snatcher book (last book that kept you up WAY late):
ராஸலீலா!
இந்த லிஸ்டில் காடு – கானகன் – இரவு – அவன் பெயர் சொல் – கடல்புரத்தில் – பாத்துமாவின் ஆடு (இதுல காடு தவிர மத்த எல்லாமே தூக்கத்த விட்டு சிங்கிள் நைட்டுல முடிச்ச புத்தகங்கள்.) கானகன் வாசிக்கறப்ப சென்னை சென்ட்ரல்ல ஏறி ஆரம்பிச்சு சேலம் நெருங்கும்போது முடிச்சுட்டேன். அதுக்கப்பறம் தூங்கி, ஈரோட்டுல வண்டி நின்னு முக்கால் மணி நேரமா அதுலயே நெனப்பில்லாம தூங்கி, பக்கத்துல ஒரு ட்ரெயினோட ஹாரன் சத்தம் கேட்டு எழுந்து பாத்தா, ஒரு மணிநேரம் ஆகி ட்ரெயின் ஷெட்டுக்கு போக மெதுவா ப்ளாட்ஃபார்ம்ல இருந்து வெளிய வந்துருச்சு. அப்பறம் அந்த தண்டவாளக் கல்லுல மெதுவா ரன்னிங்ல எறங்கி நடந்து ஸப்ப்பா. மறக்கவே முடியாது.
-ஷா