சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

30 October 2012

சின்மயி...


முடிவோ எமக்கிலை; மரணம் சொற்பிழை- 
உலகம் கற்சிலை,
உமிழ்வோம் எச்சிலை;

சிறைகள் அடைக்கட்டும்,
சிதைகள் எரிக்கட்டும் ,
ரணங்கள் வதைக்கட்டும்,
 
பிணங்கள் திசை எட்டும்;

முல்லை துஞ்சிய முதுபெரும் புலிக்கு முப்பதாண்டுகள்
மூச்சுத் திணறினீர்;
முள்வேலிக்குள் ஜனிக்கும் புலியால்
 அற்றுத் தீர்வீர்! 
முற்றும் திண்ணம்.

ஈழம் ஓர் நாள் நனவாய் மலரும் - அதன்
தேசிய கீதமும் என் விரல் எழுதும்.


சமீபத்தில் பிரபல தமிழ் கீச்சர் ’ராஜன்லீக்ஸ்’ ராஜன் உட்பட ஆறு பேர் மீது பிண்ணனிப்பாடகி சின்மயி அளித்த புகாரின் பேரில் ராஜன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே…

இது குறித்து தமிழ் தோழர்களின் ஒரு சிறிய அலசல்…

இந்த பிரச்சனை குறித்து எத்தனையோ பேர் தம் கருத்தை பதிவு செய்துவிட்டனர் என்றாலும்,

இந்த சின்மயி - ராஜன் பனிப்போர் பற்றி உறுதியான ஒரு நிலைப்பாடு எடுக்க அவர்கள் இருவருடன் குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாவது பயணித்திருக்க வேண்டும் என்றாலும்,
  
எங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க வேண்டியது எங்கள் கடமையாக உள்ளது. காரணம்,  அவர்களுடன் பயணித்த ஒரு அன்பர் எங்கள் குழுவிலும் இருக்கிறார்.

ராஜனும் நாங்களும்…
          
     நாங்கள் ராஜன் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறோம் ஆனால் நேரில் சந்தித்தது கிடையாது. அதற்கான இருமுறை முயன்றும் முடியாமல் போனதன் முழுக்காரணமும் நாங்கள் தான்.

எங்கள் குழுவில் இருவர் ராஜன் மீது மிகுந்த பற்றுடையவர்கள். அவரது எழுத்தாளுமைக்குச் சான்றுதான் மேற்கண்ட கவிதை. அப்படியான நண்பன் ஒருவன் தன் தொலைபேசி எண்ணை ராஜன் அவர்களிடம் கொடுத்து தனக்கு பிறந்தநாள் வருவதாகவும் அன்று அவரிடம் பேச ஆசைப்படுவதாகவும் கூறினான்… சற்றும் எதிர்பாராமல், நண்பனின் பிறந்தநாளன்று அழைத்தார் ராஜன். யாரென்றே தெரியாத ஒரு கடைநிலை கீச்சாளனின் விருப்பத்துக்காக முண்ணனி கீச்சாளர் அழைத்து பேசியது மிகுந்த ஆச்சரியமே!

ராஜன் அவர்களின் நண்பரும் பிரபல கீச்சாளருமான டேவிட் (@freeyavudu) என்பவர் எழுதியிருக்கும் குடைச்சல் கேள்விகள்’ இன்னும் பலவற்றை வெளிப்படுத்துகின்றது.
  
   ராஜன் அவர்களைப்பற்றி நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லை…… ஆனால் சின்மயி பற்றி சொல்லியே ஆகவேண்டும்…

சின்மயி அவர்களின் நம்பகத்தன்மை இழப்பு:
    
     யாராக இருந்தாலும் தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்பது எங்களது குறிக்கோள்.

அப்படி நிறையபேரிடம் கேள்வி கேட்டிருக்கிறோம். சிலரிடம் நேரடியாகவும் சிலரிடம் இணையம் மூலமாகவும். ”சர்ச்சைக்குறிய அந்த ட்விட்டை சின்மயி ட்விட்டியிருந்தார். நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை அழித்துவிட்டார்” எங்கள் நண்பர் கூறினார். மேலும் ராஜன் அவர்களின் இந்த பதிவு: http://www.rajanleaks.com/2012/03/blog-post.html காரணமாகவும் சின்மயி அவர்களிடம் ட்விட்டரில் தொடர்பு கொண்டோம்…

”ராஜன் அவர்கள் பதிவில் இருந்த சில கேள்விகளையும் எங்களின் சில கேள்விகளையும் முன் வைத்தோம். அவரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்! வாதம் வலுக்கவே “இவ்வாறாக கேள்வி கேட்க உங்களுக்கு உங்கள் தமிழ் ட்விட்டர்கள் பணம் கொடுக்கிறார்களா?” (Are u paid off to do such things… Your Tamil Tweeters?) என்றார். எங்களுக்கு கோபம் வந்தது. நீங்களாக இருந்தால் எவ்வளவு கொடுப்பீர்கள் என்றோம்.

அடுத்த வினாடியே அவர் அப்படி கேட்டதை அழித்து விட்டார்! மேலும் இன்னும் அவர் பேசியிருந்த சற்று கடுமையான வாதங்களையும் அழித்துவிட்டார். அதாவது நாங்கள்-அவர்-நாங்கள்-அவர்-நாங்கள்-அவர்-நாங்கள்-அவர்-நாங்கள் என்றிருந்த வாதங்கள் நாங்கள்- நாங்கள்-நாங்கள்-அவர்-நாங்கள்-நாங்கள்-அவர் என்றாகிவிட்டது!

ஒரு சாதாரண வாதத்திலேயே இவ்வளவு திருத்தங்களை செய்யும் அவர் சர்ச்சைக்குறிய வாதங்களை அழித்திருக்கமாட்டாரா என்ன?

இவ்வளவு ஏன்? சின்மயி-மகேஷ் மூர்த்தி வாதத்தைத்தான் ஊரே பார்த்ததே! இதற்கு மேலும் என்ன வேண்டும் சின்மயி ஒரு “Vindictive Liar” என்பதற்கு!

ட்விட்டர் இணையத்தில் ஒன்றரை ஆண்டுகளாக நான் (இக்கட்டுரையை எழுதுபவன்) இருந்தும் அவர் செய்தவற்றை விளக்க எனக்கு ஒரு நண்பனின் உதவி தேவைப்பட்டது என்றால் புதிதாக வருபவர்களுக்கு????

சின்மயி ரசிர்களுக்கு,

நமக்கு ஒருவரை பிடிக்குமாயின் அவர் பேசுவதெல்லாம் உண்மை என நம்புதல் தவறு. அப்படி நம்புதலாயின் நமக்கெதற்கு ஆறாம் அறிவு???

விகடன் பத்திரிக்கையில் சின்மயியின் தாயார் பேசியது மிகவும் முக்கிய/நல்ல விஷயம். ஆனால், அதற்கும் இந்த புகாருக்கும் என்ன சம்பந்தம்? இணையத்தில் யார் என்ன பேசினாலும்  போகிற போக்கில் யார் என்ன செய்தாலும் அதற்கு ராஜன் அவர்களே காரணம் என்ற தொனியில் பேசுகிறாரே அதை உணர முடிகிறதா??? “PETA” என்றதும் ஆதரிக்கும் நீங்கள் அவரே ‘சிக்கன்’ விளம்பரத்திற்கும் பாடியிருக்கிறாரே அதை எதிர்க்கவில்லையா?

இணைய சுதந்திரம் என்பதை செலிபிரிட்டிகள் இப்படித்தான் உபயோகிப்பார்களா??

இதன் முடிவை சட்டம் முடிவு செய்யும்!!!

எது எப்படியோ?  உங்கள் சின்மயி தன் நம்பகத்தன்மையை முழுவதுமாக இழந்துவிட்டார்.


நன்றி


சம்பத்தப்பட்ட சில பதிவுகள்:
    
மகேஷ் மூர்த்தி அவர்களின் கட்டுரை : http://t.co/6d5jFOPW

சின்மயி அவர்களின் விளக்கங்கள் (ஃபேஸ்புக் பக்கம்) : http://www.facebook.com/pages/Chinmayi-Sripada/130027849040?fref=ts

ராஜன் அவர்களின் விளக்கங்கள் : http://www.rajanleaks.com/2012/03/blog-post.html

இன்னும் பலவித ஆதரவுகள்/எதிர்ப்புகள் சமீப காலமாக ட்விட்டர் இணையத்தில் உலவுகின்றன…

வருகைக்கு நன்றி…

10 October 2012

என் வாழ்க்கையும் என் கண்களும்...

“Have u started……” ஒரு அழகான குறுஞ்செய்தி அனுப்பினாள் அவள்.

இருக்கற அவசரத்துல இது வேறயா என்று நினைத்துக்கொண்டு “Yep…. On d way” என பதில் அனுப்பிவிட்டு மணியை பார்த்தேன்.

மணி 10.23 உச்சகட்ட சாலை நெரிசலில் இருந்து தப்பி ஒடிய வண்டிகளில் எங்களுடையதும் ஒன்று.  என் நண்பன் மேலும் மேலும் வண்டியை முறுக்க, இன்னும் கடுப்புதான் வந்தது! ஒரு காரில் சிறு குழந்தை ஒன்று எங்களை பார்த்து சிரித்தது. அவசரத்தில் ஒரு டாட்டா காட்டிவிட்டு ஓடத்தொடங்கினோம். ரயில் நிலையத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது எங்கள் வண்டி. வானில் சூரியனும் மேகங்களுக்கு இடையில் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தது.
மழை வரும் அறிகுறி!

பார்க்கிங், டோக்கன், டிக்கெட் இதையெல்லாம் தாண்டி நாங்கள் ஈரோடு ரயில் நடைமேடைக்கு வருகையில் மணி 10.35.

10.30 மணிக்கு வரவேண்டிய பாலக்காடு-திருச்சி பாசஞர் ரயில் ஒரு ஹை டெசிபல் அலறல் சத்ததுடன் வந்தது. போதாக்குறைக்கு மூன்று மொழிகளில் அறிவிப்பு வேறு. அறிவிக்கப்படாத ஓட்டப்பந்தயமாக இருந்தது சீட் பிடிக்கும் பணி. ஈரோட்டில் இஞ்சின் மாற்றப்படும் - அதற்கு ஒரு பத்து நிமிடம் ரயில் நிற்கும் என்பதால் எப்படியும் இடம் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு.

இந்த ஓட்டத்தில் நான் படியை நெருங்கியதும் ஒரு மாற்றுத்திறனாளி வந்தார். அவரை ஒரு முதியவர் ஏற்றிவிட, அவரை முதலில் தாங்கிப்பிடித்து  ஏற்றிவிட்டு, பிறகு அந்த முதியவர் ஏறும்போதும் தடுமாறிவிட, அவரையும் பிடித்து ஏற்றி விடுவதற்குள் சீட்டுகள் நிரம்பிவிட்டன. நான் ஏற்றிவிட்டிருந்த பெரியவர் திரும்பி நன்றி என்றார். வழிய விடுங்க பெரியவரே என்று நினைத்துக்கொண்டு உள்ளே ஏறினேன்…

ரயில் முழுவதும் கூட்டம் நம்பி வழிந்ததால் படியிலேயே நின்று கொண்டோம். எங்கள் பைகளை ஒரு ஓரமாக வைக்க, அங்கு அப்பா-அம்மா-மகன்-மருமகள்-பேரன் என்ற வடிவமைப்பில் ஒரு குடும்பத்துடனும் அவர்களின் கதைகளுடனும்  இடத்தை பகிர்ந்தோம். அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் ஒரு அலறலுடன் ரயில் புறப்பட்டதும் படியில் அமர்ந்து மழை பெய்யக்காத்திருக்கும் காலநிலை காணும் வேலையில், பக்கத்தில் ஒரு முதியவர் வந்து அமர்ந்தார். பாதி இடம் போனது.  "இது ஆவறதில்ல மச்சி" என்று படியில் இருந்த முதியவரிடம் இடம் பகிர்ந்துகொள்ள முடியாமல் எழுந்து நின்று,  இருக்கின்ற கடுப்பில் எல்லாம் பொறுத்து, பின் ஐபாட் எடுத்து காதை அடைத்துக்கொண்டால் அதில் நேற்று பாதியில் நிறுத்திய ‘பச்சைகிளிகள் தோளோடு’ பாடியது. இருந்த கடுப்பில் இது வேறா என்ற போது ஃபோன் துடித்தது. வைப்ரஷன். மீண்டும் அவள்….

“Hows going da” என்றாள்…

“It’s a terrible trip” என்று டைப் செய்தேன்….

அதை கவனித்த நண்பன் என்னைப்பார்த்து சிரித்தான்…

“ஏண்டா டேய்...” என்று சலித்துக்கொண்டேன்.

ஒரு நிமிடம்…. இது இப்படி முடியவேண்டியதா என்ன?  ச்சே ச்சே!
******** ரீவைண்ட்… ரீவைண்ட்… ரீவைண்ட்…. *******
அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் ஒரு அலறலுடன் ரயில் புறப்பட்டதும் படியில் அமர்ந்து மழை பெய்யக்காத்திருக்கும் காலநிலை காணும் வேலையில்...

******** ரீவைண்ட்… ரீவைண்ட்… ரீவைண்ட்…. *******
பாலக்காடு-திருச்சி பாசஞர் ரயில் ஒரு ஹை டெசிபல் அலறல் சத்ததுடன்...

******** ரீவைண்ட்… ரீவைண்ட்… ரீவைண்ட்…. *******
“Have u started……” ஒரு அழகான குறுஞ்செய்தி அனுப்பினாள் அவள்.

மழைபெய்யக்காத்திருக்கும் வானத்திலும் அழகாக என் பதிலுக்காக காத்திருப்பவளுக்கு பதில் அனுப்பிவிட்டு திரும்பிப்பார்க்கையில் ஒரு குழந்தை என்னை நோக்கி சிறு புன்னகையை உதிர்த்தது. அழகு! அவசரமென ரயில் பிடிக்கபோனாலும் சாலை நெரிசலில் சிக்கியிருந்தாலும் அந்தச் சிரிப்பு அப்போட்தைக்கு தேவையாகவே இருந்தது. திரும்பி சிரித்துவிட்டு கிளம்பினேன்.

உச்சபட்ச கூட்டாத்திலும் விடா முயற்சியாய் கால்கள் இல்லாவிட்டால் என்ன எனக்கு கைகள் இருக்கிறதே என்று ஒரு மாற்றுத்திறனாளி ஏற முயன்றார். அவருக்கு ஒரு முதியவர் உதவ, நானும் உதவினேன். பின் அந்த முதியவர் தடுமாறுகையில் நான் தாங்கிப்பிடித்தற்காக நன்றி சொல்லத்திரும்பினார். எவ்வளவு நிறைவு அவர் கண்களில்…

ரயில் புறப்பட்ட பின், இடம் இல்லாததால் படியில் அமர்திட, அந்த ஊரின் அழகு புலப்பட்டது!  படியில் அமர்ந்த்து ஊரை ரசித்தேன். அப்போது ஒரு பெரியவர் வந்து படியில் அமர்ந்தார். கால்களில்லாமல் ஒருவர் நடக்கும்போது நல்ல கால்கள் கொண்ட நான் தாரளமாக நிற்கலாம் என்று அவருக்கு முழு இடத்தையும் கொடுக்க எழுந்தேன். பின்னால் திரும்பி பார்க்கையில் ஒரு தந்தை தன் மகனுக்கு நல்ல கதை சொல்லிக்கொண்டிருந்தார். குடும்பம் என்றாலே தனி அழகுதானே! நான் நிற்பதை தாங்காத முதியவர் எனக்கும் ஒரு இடம் கொடுத்தார்.  சந்தோஷம் என்பது ஒருவருக்குள் செலுத்துவதல்ல ஒருவர் அவராகவே உணர்வது என்று நினைத்துக்கொண்டு ஐபாடை ஆன் செய்தேன்…

அதில் “அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம்” என்று பாடியது… உண்மைதான்! ஆனந்தம் எங்கும் உள்ளது! எனக்கு பிடித்த பாடல்… என்னை சுற்றிலும் ஆனந்தம் பரவுவதாய் உணர்கையில் என்னவளின் குறுஞ்செய்தி வந்தது….

“Hows going da” என்றாள் அவள்….

”Fantastic dear…” என்று பதில் அனுப்பினேன்…

நண்பன் என்னைப்பார்த்து சிரித்தான்…

பதிலுக்கு நானும் புன்னகைத்தேன்…

ஆம்!  "Happiness Exists Everywhere"  என்பார்கள்! 

அது எங்கோ எதிலோ வேறு உலகில் இருப்பதல்ல.... என்னைச்சுற்றியே இருக்கிறது!

"ஆனந்தம், அழகு" என்பதெல்லாம் உலகை பார்க்கும்  விதம் பொருத்தே அமைகிறது!


17 September 2012

அணுசக்தி வேண்டாம் - சுஜாதா!

அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.

விபத்துகள்:-
முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-
அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

சாம்பலை என்ன செய்வது:-
அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-
உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-
இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.

காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-
நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-
அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-
நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் வாயு:-
ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-
அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி

சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.
இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.


(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது)
(Taken From :- சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? &
பெட்ருமாஸ் லைட்டேதான் வேணுமா? Facebook Page)


 

4 June 2012

யார் சொன்னது!


யார் சொன்னது!


ஆண்கள் சுதந்திரமானவர்கள்!

பெண்கள் ஆண்களை சார்ந்தவர்கள் என்று!


சுதந்திரம் என்பது 'சுயமாக, தனிச்சையாக, தம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது'!

ஆண்கள் அப்படியா! சம்பாதிப்பதும், இன விருத்திக்கு உதவுவதையும் தவிர மற்ற எதையும் அவர்கள் செய்வது இல்லை!

வீட்டை பார்க்கும் பெண்கள் ஆண்களின் தேவையை பூர்த்தி செய்கிறார்கள்!

தாலாட்டும் தாய்!

தோள் கொடுக்கும் தோழி!

துணை நிற்கும் சகோதரி!

அரவணைக்கும் மனைவி!

என ஆணை சுற்றி இருப்பது எல்லாமே பெண்கள் தான்!


சம்பாதிப்பதை கூட பெண்கள் செய்ய தொடங்கிவிட்டார்கள்!

தம் வேலைகளையும் செய்து, வீட்டையும் கவனித்து, குடும்பத்தையும் கவனிக்கும் பெண் அடிமைவாதியா?

நன்றாக யோசித்து பார்த்தல் தெரியும் யார் யாரை சார்ந்து இருக்கிறார்கள் என்று!



/* கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன*/

20 May 2012

கடவுள், ஒரு பிச்சைக்காரன் மற்றும் நான்



முன்குறிப்பு:
இது ஒரு LIPOGRAMMATIC ARTICLE!
 அதாவது  சில வார்த்தைகளை அறவே தவிர்த்துவிட்டு அல்லது சில வார்த்தைகளை உபயோகிக்காமல் பதிவு எழுதும் முறை!  இந்த பதிவில் 'ஒரு' என்ற வார்த்தையும் '!' (ஆச்சரியக்குறி)யும் உபயோகிக்கப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது!
இதுவும் ஒருவகையில் ஒரு சாதனையே!

கடவுள். ஒரு பிச்சைக்காரன் மற்றும் நான்:

பாரி என் நண்பனுக்கும் மேலானவன்.

அன்றுஎங்கள் நெருங்கிய நண்பனின் இல்லத்திருமண விழாவிற்கு காரைக்குடி செல்ல நேர்ந்தது.ஈரோட்டிலிருந்து திருச்சி வழியாக காரைக்குடி செல்ல திட்டம்.நண்பர்கள் கூட்டமாக வேனில் சென்று விட்டதால்,நானும் பாரியும் பேருந்தில் கிளம்பத்தயாரானோம்.
ஈரோடு.

பாரி எதார்த்தமாக பேசுவதிலும் சில உள்ளர்த்தம் இருக்கும். அப்படி பயணங்கள் பற்றி தொடங்கிய எங்கள் பேச்சு கடவுளிடம் வந்த போது திருச்சி நெருங்கியிருந்தது. தூக்க கலக்கத்தில் அங்கு பிச்சை எடுத்த சிறுமியிடம் பத்து ரூபாய் கொடுத்தான். ’இவர்களை பிச்சை எடுக்க வைத்து எவனோ பயன் அடைகிறான். இவர்களுக்கு எதற்கு பணம் தருகிறாய்” என்றேன்.

தானத்தைப் பற்றிய என் கருத்தும் இதுவே. இந்நிலையில் பாரி சில நாட்களுக்கு முன் படம்பார்த்துவிட்டு வீட்டருகே வரும்போது மின்னல் 120-130 கிமீ வேகத்தில் வந்த கார் அவனுக்குப்பிடித்த அந்த தெருவின் செல்ல நாயை இடித்துச் சென்றதாகச் சொன்னான். அங்கிருந்த பிச்சைக்காரன் அந்த நாயை கையில் எடுத்து வைத்துக்கொண்டு காரில் வந்தவனை நோக்கி கத்தியிருக்கிறான். இருந்தும் காரில் வந்தவன் பறந்து விட்டான். ”எனக்கு கூட தோன்றவில்லை அந்த உயிருக்கும் வலிக்கும் என்று. கடைசி நேரத்தில் அந்த உயிரை கையில் எடுத்து அதற்காக குரல் குடுத்த அந்த பிச்சைக்காரனும் கடவுள் தான். அவனுக்கு தர்மம் செய்து அவன் பசியை போக்கும் நானும் கடவுள் தான்” என்று பாரி நிறைவு செய்தபோது என்னிடம் அமைதி மட்டுமே மிஞ்சியது. மேற்கொண்டு எதுவுமே பேசவில்லை.

காரைக்குடியில் விழா முடிந்து திரும்பி வரும்போது நடந்தவற்றை என்னால் மறக்கவே முடியாது.மதிய நேரம் நல்ல உணவு முடிந்து எக்ஸ்பிரஸ் பேருந்தில் ஏறி டிக்கெட் எடுத்தபின்னர் சிறிது அரட்டைக்குப்பின் தாகம் எடுத்தது.  நான் தண்ணீர் பாட்டிலை டீக்கடையிலேயே விட்டுவிட்டது தெரிந்தது. நானோ நீர் உடம்புக்காரன். எனக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும்.

சரி சமாளிப்போம் என்று எண்ணி ஜன்னலில் காற்று வாங்கத்தொடங்கினேன். ஆனாலும் தாகம் வாட்டியது. இந்தப்பேருந்து இடை நில்லாப் பேருந்து என்பதால் அடுத்த நிறுத்தம் புதுக்கோட்டையில் அதற்கு இன்னும் சுமார் 40 கிமீ தூரம் இருந்தது. என்னால் முடியவில்லை. புதுக்கோட்டையில் தண்ணீர் வாங்கிக்கோள்ளலாம் அதுவரை தூங்கு என்ற பாரியின் அறிவுரையை ஏற்று உறங்கினேன்..... “வாட்டர் வாட்டர்” என்ற சத்தம் கேட்டு லேசாக என் உறக்கம் கலைந்தது.

கண் விழித்து பார்த்தால் புதுக்கோட்டை. பேருந்து மெதுவாக நகர்ந்த்து.

பேருந்து நிலையமாக இருக்கும் என்று என் தோளில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்த பாரியை எழுப்பினேன். எழுந்து பார்த்தபோது தான் தெரிந்தது ஐந்து நிமிடம் நின்று விட்டு புதுக்கோட்டையை விட்டு வெளியே வந்துவிட்டோம் என்று. எனக்கு வந்த கோபத்திற்கு பாரியை திட்டத்தொடங்கினேன். அவன் என்ன செய்தான். பாவம். என் தவறல்லவா இது. இனி பேருந்து திருச்சியில் தான் நிற்குமாம். அதற்கு இன்னும் 50 கிமீ இருந்தது. மீண்டும் தூங்க முடியவில்லை.

 கண்டக்டர் அப்போது ஓட்டுநர் அருகிலிருந்த பாட்டிலில் தண்ணீர் குடிப்பதைக்கண்டு நான் அவரிடம் சிறிது நீர் தருமாறு கேட்டேன். அவரோ இப்போது தான் தீர்ந்த்தது என்றார்.
அந்த பேருந்தில் அதிக கூட்டமில்லாததால் யாரிடமும் அவ்வளவாக தண்ணீரே இல்லை.தாகத்தில் தவிக்கும் நானும் பாரியும் தான் அந்த பேருந்திற்கு அப்போதைய பொழுதுபோக்கு.

 எப்படியோ தாக்குப்பிடித்து விழி பிதுங்கி வெளியில் எட்டிப்பார்த்தேன். திருச்சி 18 கிமீ என்ற பலகை தெரிந்தது. அந்த சமயம் பார்த்து பேருந்தின் வேகம் குறைந்த்தது. ஏன் என்று எட்டிப்பார்த்தால் ’திருவிழாக்கூட்டம்’. ஆளுயர அலகு குத்திக்கொண்டும், பூச்சட்டி எனப்படும் நெருப்பாலான சட்டிகளையும் தலையில் பால் குடங்களையும் கொண்டு சென்றனர் அப்பகுதி மக்கள்.

மதியவேளை சூடு தெரியாமல் இருக்க ரோடு முழுவதும் தண்ணீரை ஊற்றி இருந்தார்கள். ரோட்டில் ஊற்றுவதை என் வாயில் கொஞ்சம் ஊற்றினால் உங்களுக்கு புண்ணியமாக போகும் என்று சொல்ல சொல்ல அந்த வேன் அருகில் வந்தது. அதில் இருந்த சிறுமிகள் அனைவருக்கும் தண்ணீர் பாக்கெட்டுகளை கொடுத்தனர். சிலர் நீர் மோரும் ஊற்றித்தந்தனர். ஒளிவிளக்கு தெரிந்தது. நாங்கள் அருகில் வந்த போது எங்கள் பேருந்து வேகம் எடுத்தது. தண்ணீரை பார்க்காமல் இருந்திருந்தாலும் கூட இவ்வளவு தாகம் எடுத்திருக்காது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

கடைசியாக திருச்சி வந்தடைந்தோம். அவசர அவசரமாக இறங்கி அங்கு இருந்த கடைக்கு ஓடிச்சென்று ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டி தண்ணீர் பாட்டில் வாங்கினேன். தாகம் தீர்ந்தது. குடித்துவிட்டு பெருமூச்சு விடுகையில் எதிரில் காணமுடியாத கோலத்தில் பிச்சைக்கார சிறுமி கையேந்தி நின்றிருந்தாள்.

அவள் கை என்னை நோக்கி இருந்தது.

என்னையறியாமல் என் கைகள் தண்ணீர் வாங்கிய மீதிப்பணத்தை அப்படியே அவளிடம் கொடுத்தது. அவளது முகத்தில் சாப்பிடப்போகிறோம் என்று அவ்வளவு நிறைவு. அருகில் நண்பன் பாரி என்னைப்பார்த்து புன்னகைத்தான்.

இருவருக்குமே பசி தான். பேருந்தில் என்னிடம் பணம் இருந்தது - ஆனால் பசியாறவோ வாங்கறவோ ஒன்றுமே இல்லை. இவர்கள் முன் எல்லாமே இருக்கிறது ஆனால் வாங்க பணம் இல்லை…

 அன்று முதல் இன்றுவரை நான் உண்டியல்களை மதிப்பதே இல்லை… அடுத்தவருக்கு உதவுவதால் நான் கடவுளாகிறேன் என்றால் நான் தர்மம் செய்வதில் பிழையேதும் உண்டோ?

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

பிச்சை எடுத்து மகளை என்ஜீனியரிங் படிக்க வைத்த அப்பா!

''கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற ஒளவையாரின் வாக்கிற்கு ஏற்க புதுக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற ஊனமுற்றவர், பிச்சை எடுத்து தனது மகனை என்ஜினீயரிங் படிக்க வைத்துள்ளார் என்ற செய்தி மனதை பூரிக்க வைத்திருக்கிறது.

புதுக்கோட்டை பூங்காநகரை சேர்ந்த ரவிச்சந்திரன் - லீலாவதி தம்பதிக்கு வள்ளிமயில், சுந்தரவல்லி என்ற இரு ம...கள். இரயில் விபத்தில் தனது வலது காலை இழந்த ரவிச்சந்திரன் ஒற்றைக்காலுடன் பிழைப்பு ஓட்டி வந்தார்.

ஆனால் குடும்பத்தை நடத்த போதி வருமானம் இன்றி தவித்த ரவிச்சந்திரன், மதுரைக்கு வந்துவிட்டார். அங்கு ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார் ரவிச்சந்திரன். அப்படியும் வருமானம் போதுமானதாக இல்லை. தனது மகள்களைப் படிக்க வைக்க கடுமையாக சிரமப்பட்டு வந்தார்.

யாரும் செய்ய முடியாத, எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்தார் ரவிச்சந்திரன். தன் வாழ்க்கை முடிந்து விட்டது, நன்றாக படித்து மகள்களுடைய வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதற்காக தன் கெளரவத்தை விட்டுவிட்டு மதுரையில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று கூறி தெருத் தெருவாக சென்று பிச்சை எடுத்தார் ரவிச்சந்திரன். இவரின் இந்த நிலையை கண்டு பலரும் மனம் உருகி உதவி செய்ய முன் வந்தனர். இதில் கிடைத்த பணத்தை வைத்து தனது மூத்த மகள் வள்ளிமயிலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்தார். தற்போது 2ஆம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார் வள்ளிமயில். 2வது சுந்தரவல்லி பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ளார்.

ஊனமுற்றவர் ரவிச்சந்திரன் நிலை அறிந்து மதுரை பாரதி யுவகேந்திராவும், தமிழ் அரிமா சங்கமும் சேர்ந்து 8 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. அதோடு, பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு முயற்சியால் தொழில் அதிபர் வாலாந்தூர் பாண்டியன் என்பவர் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் லேப் டாப் ஒன்றை வழங்கியுள்ளார்.

இந்த லேப் டாப்பை மதுரை கலெக்டர் சகாயம், மாணவி வள்ளிமயிலுக்கு வழங்கி பாராட்டினார். ''படிப்பது தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம்'' என்று வள்ளிமயிலுக்கு வாக்குறுதி அளித்தார் கலெக்டர் சகாயம்.

அண்மையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தந்தை ஒருவரே, படிப்பு சரியாக வரவில்லை என்று கூறி மகளை கோயில் வாசலில் பிச்சை எடுக்க வைத்தார். மகளை பிச்சை எடுக்க வைத்த தந்தை சிறையில், ஆனால் மகள்கள் படிப்புக்காக பிச்சை எடுக்கும் தந்தை ரவிச்சந்திரன் நம் மனதில் நிற்கிறார்.

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்


வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வ...ருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.

''ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

 நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை. அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள். கோபம், வெறுப்பு, சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது, திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும்.

'குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும்’ என்கிற உச்ச நிலை உருவாகும். இவைதான் தீவிர இறுதிக்கட்ட நிலை'' என்கிறார் டி.டி.கே. மருத்துவமனை சீனியர் தெரபிஸ்ட் மற்றும் கவுன்சிலர் ஜாக்குலின் டேவிட்.


குடிநோயாளிகள் என்னென்ன பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை, டி.டி.கே. மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அனிதாராவ் விளக்குகிறார். ''ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் குடிநோய் வரலாம். குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது, புரிந்துகொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது. 


குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்'' என்கிறார் அவர்.

இவர்களை எப்படி மீட்டு எடுப்பது? என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன? வழிக்காட்டுகிறார் சென்னை, விஸ்டம் போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் அறிவுடை நம்பி. ''குடிநோயாளிகளுக்கு குடிப்பது மட்டும்தான் ஒரே நோக்கமாக இருக்கும். குடிப்பதற்காக ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள். சச்சின் 100-வது சதம் அடித்தாலும் குடி, சச்சின் டக் அவுட் ஆனாலும் குடி என அவர்களுக்குத் தேவை ஏதேனும் ஒரு காரணம் மட்டுமே. சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட உடன், முதலில் உடல் பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து மது அருந்தியதால் ஏற்கெனவே உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கும், நன்றாகப் பசித்து சாப்பிடவும், ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிசெய்யும் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும். இரண்டாவது கட்டமாக மனரீதியாக சிகிச்சை அளிக்கப்படும். மது அருந்தாமல், மகத்தான வாழ்வு வாழும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளல், குடியால் ஏற்படும் பாதிப்புகளை உணர்தல், வாழ்வின் உன்னதத்தை அறிந்துகொள்ளுதல், குரூப் தெரபி, மீண்டு நல்லபடியாக வாழ்பவர்களுடனான கலந்துரையாடல், ஆலோசனை எனப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படும். உள்நோயாளியாகச் சிகிச்சை முடிந்து சென்ற பிறகும், தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு ஆலோசனைகள், மருந்துகள், பிரச்னைகளைச் சமாளிக்க வழிகள் எனச் சிகிச்சை முறைகள் தொடரும். பழைய சகவாசத்தால் சிலர் மறுபடியும் குடிக்க நேரிடலாம். திரும்பவும் குடிக்க ஆரம்பித்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் குடிப்பவருக்கு குற்ற உணர்வு இருக்கும். இந்தச் சமயத்தில் குடும்பத்தினர் மறுபடியும் சிகிச்சைக்கு அழைத்து வந்துவிட்டால் அவர்களை எளிதில் மீட்டுவிடலாம். ஒருவர் குடிநோயில் இருந்து மீண்டு, நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று மற்றவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், 'விடுபட வேண்டும்’ என்ற உறுதியான எண்ணம் குடிப்பவருக்கும் இருக்க வேண்டும். சிகிச்சை முடிந்து சென்ற பிறகும், அதே வேலை, சூழல், சமுதாயம், குடிகார நண்பர்கள் இருக்கத்தான் செய்யும். நமக்காக எதுவும் மாறியிருக்கப்போவது இல்லை. மாற வேண்டியது குடிநோயாளிதான்'' என்றார் அறிவுடை நம்பி.

குடிநோயிலிருந்து ஒருவரை மீட்டெடுப்பதைவிட அந்தப் புதைக்குழிக்குள் ஒருவர் விழாமல் காப்பாற்றுவது புத்திசாலித்தனம். அதனால், குடிபோதைபற்றிய விழிப்பு உணர்வைப் பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தே தொடங்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஓர் ஆரோக்கியமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும்! போதை ஏறினால்... பாதை மாறினால்... 1,30,000... இந்தியாவில் கடந்த ஆண்டு விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இது. ஒரு பெரும் பூகம்பம், சுனாமி பேரிழப்புகளுக்கு இணையானது. உலகிலேயே விபத்துகளில் முதலிடம். இந்த மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கான காரணம்... மதுப்பழக்கம்! (அதீத வேகத்தால் நேரும் விபத்துகள் 24 சதவிகிதம் என்றால் மதுவால் நேரும் விபத்துகள் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாம்).

மது 'உள்ளே’ சென்றவுடன் உடலில் அப்படி என்னதான் செய்கிறது? அப்போலோ மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர். பி. பொன்முருகன் விளக்குகிறார்.


''நாம் உண்ணும் உணவு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு, அதன் பிறகு கல்லீரலில் போய் பல்வேறு பொருட்களாகப் பிரிந்து ரத்தத்தில் கலக்கும். இதேபோலதான் மதுவும் கல்லீரலுக்குச் சென்று அசிட்டால்டிஹைடு, அசிட்டிக் ஆசிட், கார்பாக்ஸிலிக் ஆசிட் எனும் மூன்று பொருட்களாக உடைந்து ரத்தத்தில் கலக்கிறது. இவை மூன்றும் மூளையின் முக்கியப் பகுதிகளைப் பாதிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக கிளர்ச்சியான மனநிலை, அதிக சந்தோஷம், குழப்பம், சுயநினைவிழப்பு என்று பல்வேறு கட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். இப்படிக் குழப்பச் சூழல் ஏற்படும்போதோ, சுயநினைவை இழக்கும் தருணத்திலோதான் வண்டி ஓட்டுகையில் விபத்து நேரிடுகிறது. குறிப்பாக, நம்முடைய மூளையில் கட்டுப்பாடு மற்றும் உணரும் திறன் இருக்கிற கார்டெக்ஸ் பகுதி பாதிக்கப்படுவது முக்கியக் காரணம். எந்த வேகத்தில் ஓட்ட வேண்டும் என்பது ஸ்பீடா மீட்டர் பார்க்காமலேயே நமக்குத் தெரிந்திருக்கும். அதற்குக் காரணம், கார்டெக்ஸுக்குள் இருக்கும் ஓர் ஒழுங்குமுறையானது நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பதுதான். ஆனால், மது அருந்திய பிறகு இந்தக் கட்டுப்பாடு போய்விடும். எல்லோரும் ஓர் ஒழுங்கில் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, மது அருந்தியவர் மட்டும் தாறுமாறாக ஓட்டுவதால், விபத்து நடந்துவிடுகிறது. மூளைக்குள் ஒரு செல் இன்னொரு செல்லுக்குத் தகவல்களை அனுப்பும் நியூரோ ட்ரான்ஸ்மீட்டர்கள்பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நியூரோ டிரான்ஸ்மீட்டரில் குளுட்டோமைன், காபா என்று இரண்டு நல்ல, கெட்ட தூதுவர்கள் இருக்கின்றனர். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு குளுட்டோமைன் என்ற நல்ல நியூரோ தூதுவர்கள் அதிகமாகச் செயல்படும்; காபா தூதுவர்களின் செயல்கள் குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தியவர்களுக்கு இது தலைகீழாக மாறிவிடும். குழப்பங்களும், விபத்துகளும் நடக்க இந்தக் காபா முக்கியக் காரணம். மது அருந்திவிட்டு விபத்துக்குள்ளாவதோடு, விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எந்தத் தகவலையுமே பெற முடியாமல் சுய நினைவற்ற ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். அதனால், முதலில் அவருக்கு என்ன பாதிப்பு, வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா, எப்படி விபத்துக்குள்ளானார்... போன்ற விபரங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கத் தாமதமாகும். அதேபோல், மது அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க விளைவாக வலிப்பு போன்ற வேறு பாதிப்புகளும் வரலாம். இதோடு, அவர் குணமாவதும் பாதிக்கப்படும்!'' பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு...

குடிக்கும் நேரம் வரும்போது, மனதை ஒருநிலைப்படுத்தும் வகையில் தியானம், பிரார்த்தனை அல்லது மனதை மாற்றும் வகையில் மனைவி, குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, பொது இடங்களுக்குச் செல்வது, விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். ஆரோக்கியமான பொழுதுபோக்குகளையும் நல்ல நண்பர்களின் நட்பையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். எந்தச் சூழலில், யார் குடிக்கக் கூப்பிட்டாலும், மதுவை அருந்தக் கொடுத்தாலும் 'வேண்டாம்’ என்று திடமாகக் கூற வேண்டும்.

பெற்றோர்களின் கவனத்துக்கு... 


நட்பை கவனிக்கவும், நண்பர்கள் யார் என்ற தெரிந்து வைக்கவும் . பார்ட்டி, ஃபங்ஷன் என்று நேரம் கழித்து வரும் மகனைக் கண்டிப்பாகக் கூர்ந்து கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். வாய் குளறுதல் மற்றும் மது வாடை வந்தால் நல்ல நிலையில் இருக்கும்போது அவருடன் பேசுங்கள், மதுவால் வரும் கேடுகளை எடுத்துச் சொல்லி, உங்களுடைய கனிவான கண்காணிப்பில் அவர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை பிள்ளைகளின் கையில் அதிகப் பணப்புழக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். நட்பு வட்டாரத்தினால், மகன் பாதை மாறுவது தெரிந்தால், ஒரிரு வாரங்கள், குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வது பலன் தரும். புதிய இடமும் மாறுபட்ட சூழலும் இதற்கு உதவியாக இருக்கும். மனம் விட்டு பேசுவதும் மகத்தான பலனைத் தரும். வெளியூரில் படிக்கும் மகனாக இருந்தால், அடிக்கடி அவனிடம் போனில் பேசுவது, அந்த ஊரில் இருக்கும் அக்கறையுள்ள குடும்ப நண்பர்களைப் போய் பார்க்கச் சொல்வது, 'நாங்கள் உன் அருகில்தான் இருக்கிறோம்’ என்று அடிக்கடி அவருக்கு உணர்த்துவது... இவையெல்லாம் அவருக்குள் பெற்றோர் மீதான அன்பு கலந்த மரியாதையை ஏற்படுத்தும்; தவறான செயல்களுக்கு அடிமையாகாமல் இருக்க உதவும்.

மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்! "மது தீமைகளின் தாய்" -என்று ஒரு மகான் சொல்லி இருக்கிறார். ஒரு நல்லவன் மது அருந்த ஆரம்பித்துவிட்டால் அணைத்து தீமைகளையும் செய்ய ஆரம்பித்துவிடுவான், கத்துவது, வெட்கத்தை இழப்பது, ஆடுவது, பாடுவது, பெண்களை செக்ஸ் எண்ணத்தோடு பார்ப்பது, நண்பர்களோடு அல்லது மற்றவர்களோடு வேண்டுமேன்றே சண்டைக்கு போவது, வாகனத்தை வேகமாக ஓட்டுவது, etc முடிவில் அடிதடி, தஹரார், கொலை, விபச்சாரம், கற்பழிப்பு, போலீஸ் கேஸ், ஜெயில் வாழ்கை, அவனது குடும்பம் நடுத்தெரு, வறுமை, தற்கொலை, அடிக்கடி கணவன் மனைவி சண்டை, அதனால் குழந்தைகள் பாதிப்பு, அதனால் விவாகரத்து etc.

15 March 2012

நாம் யார்?

எங்களது அடுத்த குறி...

எங்கள் கல்லூரியில் பேசிய ஒரு பிரபலம் சொன்னது:

மேலை நாட்டவர்...

அவர்கள் "TV" கண்டுபிடித்தார்கள்
நாம் "தொலைகாட்சி " என்று பெயர் வைத்தோம்...

அவர்கள் "COMPUTER" கண்டுபிடித்தார்கள்
நாம் "கணினி" என்று பெயர் வைத்தோம்...

அவர்கள் "ELECTRICITY" கண்டுபிடித்தார்கள்
நாம் "மின்சாரம்" என்று பெயர் வைத்தோம்...

அவர்கள் "LAPTOP" கண்டுபிடித்தார்கள்
நாம் "மடிக்கணினி" என்று பெயர் வைத்தோம்...

அவர்கள் "CELLPHONE" கண்டுபிடித்தார்கள்
நாம் "அலைபேசி" என்று பெயர் வைத்தோம்...

அவர்கள் "MOVIE" கண்டுபிடித்தார்கள்
நாம் "திரைப்படம்" என்று பெயர் வைத்தோம்...

இன்னும் எத்தனையோ இருக்கிறது...

THEY ARE INVENTORS....
நாம் யார்???

பெயர் வைக்கும் கூட்டமா???????

இதைத்தான் தமிழர்களால் செய்ய முடியுமா?

10 March 2012

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம் கூடங்குளம் அணுமின்திட்டம் பற்றிய பேட்டி

கூடங்குளம் பற்றி அப்துல்கலாமிடம் சில கேள்விகள்!

·                     அணு மின்சாரம் மலிவானது
·                     கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
·                     அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
·                     சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
·                     நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
·                     யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.



முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் கருத்துகளை நன்றாக ஊன்றிப் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் அக்கருத்துகளையே ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.



1.கலாம்: அணு மின்சாரம் மலிவானது.



முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறும் இக்கணக்கானது, ‘ஒரு கிராம் யுரேனியத்தின் விலையால் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவை வகுத்துச் சொல்வதாகும்’. ஆனால் அணு மின்சாரத்தைக் கணக்குப் போடும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை:

ð அணு உலைகளுக்குச் செய்யப்படும் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவு. (இதுவே பிற முறைகளுக்கு ஆகும் செலவை விடப் பல நூறு மடங்கு அதிகம்)
ð அணு உலையை ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பின் பிரித்துக் கலைத்துவிடவேண்டும். இப்போது கூடங்குளத்திற்குப் பதின்மூன்றாயிரம் கோடி உரூபா செலவாகியிருப்பதாக அரசு சொல்கிறது. இவ்வுலையைப் பிரிக்க இன்றைய கணக்கில் இருபதாயிரம் கோடி உரூபா ஆகும் என்று அரசு கூறி வருகிறது. (அப்படியானால் இன்னும் முப்பதாண்டுகளில் அத்தொகை ஐம்பதாயிரத்தில் இருந்து அறுபதாயிரம் கோடி உரூபா தேவைப்படும்.). ஆகக் கூடங்குளத்திற்கு ஆகப்போகும் தொகை (கட்டுவதற்கும் பிரிப்பதற்கும் மட்டும்) ஏறத்தாழ எண்பதாயிரம் கோடி உரூபா.
ð அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கும் ஒன்று என்றால் “Wall street நிறுவனங்கள் அணு உலைகள் அமைக்க உதவ மாட்டோம்” (“Wall street does not vote for Nuclear Industries”) என ஏன் சொல்கிறார்கள்?
ð நாட்டின் அணுஆற்றல் துறையை அரசு அலுவல் கமுக்கச் சட்டத்தின்’ (‘Official Secret Act’) கீழ் பாதுகாத்து வருகிறது. எனவே அங்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்குச் சொல்லப்பட மாட்டாது. கதை இப்படியிருக்க, அணு மின்சாரம் மலிவானது என்று எந்தக்கணக்கில் கூறுகிறார்கள்?



2. கலாம்: கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.



ð இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசு, இரசிய அரசுடன் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி, கூடங்குளம் அணு உலையில் நேர்ச்சி ஏதும் ஏற்பட்டால் இந்த அணு உலையை நிறுவியிருக்கின்ற ஆடம்சுதுரோயெக்சுபோர்ட்டு” (“Atomstroyeksport”) நிறுவனத்தின் மீது யாராலும் வழக்குத் தொடர முடியாது. இந்த ஒப்பந்தத்தின் பெயர் தான் அணு உலை நேர்ச்சி இழப்பீட்டு ஒப்பந்தமாகும்’. அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது என்றால் இந்த ஒப்பந்தம் எதற்கு?
ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் அணு உலைகளைக் காப்பீடு செய்ய முன்வருவதில்லை?
ð மற்ற எரிபொருள் ஆற்றல் தொழில்களைக் காட்டிலும் அணு ஆற்றல் தொழிலுக்கு ‘Wall Street’ வங்கிகள் ஏன் கூடுதல் வட்டி வாங்குகின்றன?


3.கலாம்: அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ð கழிவுகளைப் பாதுகாக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் இரசியா ஏன் (முன்பு ஒப்புக்கொண்டதற்கு மாறாகக்) கழிவுகளை எடுத்துச் செல்ல முடியாது எனக் கைவிரிக்கிறது?
ð அணுக் கழிவுகள் என்று சொல்வது ஏதோ நம்முடைய வீட்டில் இருந்து கொட்டும் சமையல் கழிவுகளைப் போல என எண்ணி விடாதீர்கள். அணுக்கதிர் தனிமமான புளூட்டோனியத்தின் ஒரு கிராமில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியே புற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்தக் கழிவு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்.
ð இரண்டு இலட்சம் ஆண்டுகள் (சரி! வெளியில் பேசப்படுகிற இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்). இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருளை எட்டாண்டுகள் மட்டும் பாதுகாத்துவிட்டு அதன் என்ன செய்யப் போகிறோம்?
ð அணுக்கழிவை நிலநடுக்கமும் நீர் ஒட்டும் வாய்ப்பும் அறவே இல்லாத யூக்கா மலையில் ஆழப் புதைக்கும் திட்டத்திற்குப் பல்லாயிரம் கோடிச் செலவழித்த பிறகு, அதுவும் பெரிய தீங்கு விளைவிப்பது தான் என அமெரிக்கா அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்?

4.கலாம்: சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.

ð ஒருவர் கூடச் சாகாத புகுசிமா நேர்ச்சிக்கு ஏன் நேர்ச்சி அளவு: ஏழு என உச்ச அளவு சொல்லப்பட்டது?
ð ‘செர்நோபிளைப் போல இருபது மடங்கு கதிர்வீச்சு வெளிப்பட்டுள்ளது என அமெரிக்காவில் அணுத் தொழிலில் துணைத்தலைவராக இருந்த அர்னாடு கண்டர்சன் என எப்படிச் சொன்னார்? (http://www.aljazeera.com/indepth/features/2011/06/201161664828302638.html)
ð ஒருவர் கூடச் சாகவில்லை என்றால் ஏன் சப்பான் அரசு தன்னுடைய நாட்டில் அணு உலைகளை நிறுவுவதை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?
ð ஒருவர் கூடச் சாகாத சிறிய நேர்ச்சிக்குச் சப்பான் அரசு ஏன் அங்கு வாழ்ந்து வந்த எழுபதாயிரம் பேரை உடனடியாக வெளியேற்றியது?
ð புகுசிமாவில் பயிரான நெல்லை ஏற்றுமதி செய்யக்கூடாது எனச் சப்பான் அரசு ஏன் தடை விதித்தது? (http://www.dnaindia.com/world/report_japan-bans-shipment-of-rice-harvested-in-fukushima-after-high-cesium-level-detected_1619606)


5.கலாம்: நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.


ð இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின் இரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் எத்தனைப் பேர் இறந்தார்கள்? அதன் பிறகு எத்தனைக் குழந்தைகள் ஊனமாக, மனவளர்ச்சி குன்றியதாக எனப் பல்வேறு குறைகளுடன் தொடர்ந்து பிறந்திருக்கின்றன என்பது நீங்கள் அன்றாடம் செய்தித்தாள் வாசிப்பவராக இருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதைப் போல நூறு மடங்கு கதிர்வீச்சைச் செர்நோபில் அணு விபத்து வெளிப்படுத்தியது என்றால் எவ்வளவு பெரிய அவலம் நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.
ð ஐம்பத்தேழு பேர் இறந்து போவது என்பது ஒரு பேருந்து நேர்ச்சியைப் போலத்தான்! அப்படியானால் அதை ஏன் ஆசியாவின் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழலியல் துறை பாடத்திட்டத்தில் வைத்துப் பொறியியல் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள்? கலாம் அவர்களே அப்பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றினாரே!
ð செர்நோபிள் நேர்ச்சியால் ஒன்பது இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேர் இறந்து போனார்கள் என்று இரசிய அரசு அறிக்கையே சொல்கிறது. (இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘Chernobyl: Consequences of the Catastrophe for People and the Environment’ என்னும் அறிக்கையைப் படித்துப் பாருங்கள்).
ð செர்நோபிள் நேர்ச்சியால் செர்நோபிளைத் தாண்டி ஐரோப்பாவில் 1 இலட்சம் சதுர கி. மீ. நிலம் வேளாண்மை செய்ய முடியாத அளவு மாசுபட்டுள்ளது.


6.கலாம்: யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.


ð செருமன் நாட்டின் அதிபர் (சான்சலர்) ஆங்கெலா மார்க்கெல் நம்முடைய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே சப்பான் நேர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்ப்பால் தான் அணு உலைகளை மூடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார். இது கலாம் அவர்களுக்குத் தெரியாதா?
ð யுரேனியம் கிடைக்காமல் தான் செருமனி அணு உலைகளை மூடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நம்முடைய நாட்டில் யுரேனியம் கிடைக்கிறதா? இல்லையே! இந்த யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்குத் தானே மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது!
ð யுரேனியத்தை நம்முடைய நாட்டிற்கு இறக்குமதி செய்ய முன்வந்துள்ள ஆசுதிரேலியாவில் ஓர் அணு உலை கூடக் கிடையாது! ஏன்?


பதில் கிடைக்குமா?