ஒற்றயைறை வீ்ட்டுத் தொட்டிலில் எதையோ நினைத்து
தூக்கத்தில் சிரிக்கிறது
குழந்தை
கனவில் வந்த
கடவுளாக இருக்கலாம் என்றாள்
அவள்
அவனோ
அதெல்லாம் ஒன்றுமில்லை வா என்றான்
குழந்தையின் உறக்கம்
உறுதியாகும்வரை
காத்திருந்தவர்களது
முதல் முத்தலிலேயே
மீண்டும்
சிரித்தது குழந்தை!
- ஷா
No comments:
Post a Comment
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன