இந்த
நள்ளிரவில் தனியாக
ஒரு நாற்காலியில்
அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும்
எனக்கு
ஒரு சிகரெட்
கொஞ்சம் பிராந்தி
ஒரு சாம்பல் தட்டு
பேசுவதற்கு ஒருவன்
போதும்
அவன் போனால்
இன்னொருவன்
அவர்களுடன்
நழுவிச் செல்லும்
நினைவுகளைக் காண
துரத்திக்கொண்டே செல்கிறேன்
இன்னும் வெகுதூரம்
சென்று
யாருமற்றவனாய்
திரும்பி வந்து
என்னை விட்டு விலகக்
காத்திருக்கிறேன்
காலுக்கடியில் சாவகாசமாய்
அமர்ந்திருக்கும்
பூனை மெல்ல
எட்டிப் பார்க்கிறது...
- ஷா
No comments:
Post a Comment
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன